காகமும் தண்ணீரும்
ஆனால் பானையின் அடியில் மட்டுமே கொஞ்சத் தண்ணீர் இருந்தது. இது காகத்திற்கு குடிப்பதற்கு எட்டவில்லை. கவலையுடன் அடியிலிருக்கும் தண்ணீரை எப்படிக் குடிக்கலாம் என்று யோசித்தது. அதற்கு ஒரு நல்ல யோசனை தட்டுப் பட்டது. உடனடியாக அதைச் செயற்படுத்தத் தொடங்கியது.
பானையின் அருகிலிருந்த சிறு சிறு கற்களைப் பொறுக்கிப் பானையினுள்ளே போட்டது. கற்கள் உள்ளே விழ விழ அடியிலிருந்த தண்ணீர் கொஞ்சங் கொஞ்சமாக மேலே வந்தது. காகத்திற்கு எட்டும் வரை வந்ததும் தண்ணீரைத் தாகம் தீரக் குடித்தது. தனது புத்தியைத் தானே மெச்சிக் கொண்டு பறந்து போனது.