Insert Logo Here

Search only in Ottawa Tamil School

இலக்கியத் தேடல்

ஆண்டு விழா காணொளிகள்

புதிய தகவல்கள்
Latest News


Tamil School App தமிழ்ப்பள்ளி செயலி

அறிவிப்புகள் / Announcements
2022/23 வகுப்புகள் நேரில்
In person classes
பதிவுகள் / Registration
ஆரம்பநிலை(Elementary)
Credit course online:
உயர் நிலை வகுப்பு(Credit course)

தமிழுக்குப் பெருமை செய்த எண்ணிறந்தவர்களிற் சிலரின் விம்பங்கள்

பொன் முட்டை

ஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான். அவன் நிறைய வாத்துக்கள் வளர்த்து வந்தான். அந்த வாத்துக்களில் ஒன்று ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டை இட்டு வந்தது. அந்த விவசாயி அந்த தங்க முட்டைகளை விற்றுப் பணக்காரன் ஆனான்.

அவன் ஒரு பேராசை பிடித்தவன். வாத்து ஒவ்வொரு நாளும் ஒரு தங்க முட்டைதானே இடுகிறது. இதற்காக ஒவ்வொரு நாளாகக் காத்திருக்க வேண்டுமா? வாத்தின் வயிற்றுக்குள் தான் நிறைய தங்க முட்டைகள் இருக்கும். எல்லாவற்றையும் ஒன்றாக எடுத்து விற்றால், ஒரே நாளில் மிகப் பெரிய பணக்காரன் ஆகலாம் என நினைத்தான்.

அதனால் விவசாயி எல்லா தங்க முட்டைகளையும் ஒன்றாக எடுப்பதற்காக, ஒரு கத்தியை எடுத்து வாத்தின் வயிற்றைக் கீறினான். வாத்து இறந்து விட்டது. அதன் வயிற்றினுள் ஒரே ஒரு தங்க முட்டை மாத்திரம் இருந்தது. வாத்து இறந்ததினால் ஒவ்வொரு நாளும் கிடைத்து வந்த தங்க முட்டையும் அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது. விவசாயி கவலைப்பட்டு வருந்தினான். இப்போது வருந்தி என்ன பிரயோசனம். இறந்த வாத்து இறந்தது தான்.

பேராசை பெரும் நட்டம்
சிந்தித்தால் சித்தி கிட்டும்